ஆரோக்கியத்துடன் பெருவாழ்வுவாழ இதைமுதல்ல படிங்க - AalosanaiNeram

Hot

Post Top Ad

Friday, June 8, 2018

ஆரோக்கியத்துடன் பெருவாழ்வுவாழ இதைமுதல்ல படிங்க


மனித இனத்தைக் காப்பாற்றும் மருத்துவ முறைகளில்,ஆங்கில வழியில் கற்றுத் தரப்படும் அலோபதி மருத்துவம் முக் கிய இடம் வகிக்கிறது.அலோ பதி மருத்துவம், உலகம் தழுவிய முறையில் கடைப்பிடிக்கப்படும் ஒன்றாகும். இது உலகளவில் ஆங்கில மொழியில் கற்றுத் தரப்படும் மருத்துவமுறை யாகும்.
பொது மருத்துவம்('ஜென ரல் மெடிசின்') என்றால் பொது மக்களின் மருத்துவம் என்று கூறப்படும்.பொதுவாக மனித உடலின் பிரிவைச் சொல் லும்போது, 2 பிரிவுகளாகப் பிரித்து, வெளியே தெரியும் உடல் புற உடல், உள்ளே உள்ளது அக உடல் என்கிறோம்.
புற உடலின் மனிதபாக உறுப்புகளை குறித்துப் படிப்பதை(study of the human body organs), 'அனாடமி' (anatomy)என்கிறோம்.அதே உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் குறித்து படிப்பதை ஃபிசியாலஜி' என்கிறோம்.
அலோபதி மருத்துவத்தில், பல தரப்பட்ட பிரிவுகள் உண்டு. இந்தப் பிரிவுகளின் அடிப்படை மருத்துவமாக, அதனையடுத்து சிறப்புத் துறை மருத்துவமாகவும் இதையும் கடந்து, உயர் சிறப்புத் துறை மருத்துவமாகவும் பிரிவுகள் உள்ளன.எனவே பொது மருத்துவம் என்பது தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் உள்ளடக்கிய பொது மக்களுக்கான அடிப்படை மருத்துவமாகும்.

உடலில் உள்ள நோய்கள்:
1.பிறவியிலேயே உண்டாகும் நோய்கள்; 2. கொடிய நுண்கிருமிகளால் உண் டாகும் நோய்கள்; 3. விபத்து, ஆபத்தால் உண்டாகும் நோய்கள்; 4.எல்லை மீறி வளர்ந்து உறுப்புகளை அழிக்கும் புற்றுநோய்கள்; 5. மேலே குறிப்பிட்ட வகைகளில் சேராமல், சில வகை நோய்களும் உண்டு.
மனித உயிரோடு இணைந்த உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக உடலும், உயிரும் எப்படி உண்டாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.இறைவன் இந்த உலகத்தைப் படைத்தபோது, ஆதாம் என்ற ஆணையும், ஏவாள் என்ற பெண்ணையும் படைத்து இணைய வைத்தார்.
மருத்துவக் கூற்றின்படி(medical report)ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு கரு அணு(Nucleus) அவர்களது உடலில் உருவாகிறது. இவர்கள் வாலிப வயதைஅடைந்த பின், பொதுவாக இந்தக் கரு அணுக்கள் உருவாகின்றன.ஆண்களின் பாலியல் உறுப்புகளில், விந்தகங்களில் பலகோடி அணுக்கள் உருவாகின்றன. அதே நேரத்தில், பெண்கள் பாலியல் உறுப்பான கருச்செடியில் ஒவ்வொரு மாதமும் ஒரு கரு அணு உண்டாகிறது.
ஆணின் பாலியல் அணுவிற்கு விந்தணு என்று பெயர். பெண்ணின் பாலியல் அணுவிற்கு நாதம் என்று பெயர். இவை இணைந்து உருவாவதே மனித உயிராகும்.இந்த உயிர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.

குழந்தை பாலினத்துக்கு ஆணே காரணம்:
ஒரு ஆணின் கருவணுவில், எக்ஸ்-ஒய் என்ற இரு அணுக்களும், பெண் கருவணுவில் எக்ஸ்-எக்ஸ் என்ற இரு அணுக்களும் உள்ளது.ஆண் கருவில் உள்ள ஒய் அணு, பெண்ணின் கருவணுவில் உள்ள எக்ஸ் அணுவுடன் இணைந்தால், ஆண் குழந்தை பிறக்கும்.இதில் தெரிந்துகொள்வது என்னவென்றால், ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்பதற்கு ஆணின் கரு அணுக்களே காரணம்.ஆனால், பெண் குழந்தை பிறந்தால், எந்தப் பாவமும் அறியாத பெண்ணைக் குறை கூறுவது தவறாகும்.
மனித உடலில்(human body)நாம் கீழ்க்கண்ட சில மாற்றங்களைப் புரிந்துகொள்ள(understand)வேண்டும்.தாயின் வயிற்றில் பிறக்கும்போதே, குறைபாடோடு பிறக்கின்ற குழந்தைதான் பிறவிக் குறைபாடுள்ள குழந்தையாகக் கணிக்கப்படுகிறது
1.கண்ணுக்குத் தெரிகின்ற புற உடலில், சில உறுப்புகள் இல்லாமலோ, இருந்தும் குறைபாடுகளோடு பிறக்கலாம்.இப்படிப்பட்ட குறைபாடுகள் பல இருந்தாலும், சிலவற்றைப் புரிந்கொள்ள வேண்டும்.ஆண், பெண் இருபால ருக்கும் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன.சில நேரங்களில் ஒரு சிறுநீரகம் இல்லாமலும் பிறக்க வாய்ப்புள்ளது.
2. சில நேரங்களில், சிறுநீரகம்(Kidney)இடம் மாறி தங்கியிருக்கலாம்.சில நேரங்களில், சிறுநீரக உறுப்புகள் இணையும் இடங்களில் அடைப்பு அல்லது தடை ஏற்பட்டு பிறக்கலாம்.
இப்படி பல தரப்பட்ட பிறவிக் குறைபாடுகளை, மருத்துவ ஆய்வுக்கருவிகள் மூலம் கண்டறிவதால், குழந்தைகள் பிறக்கும் முன்பும், பின்பும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து குறைபாட்டை நீக்க முடியும்.

வளரும் உடலும், தெரிய வேண்டிய செய்திகளும்:-
மனித உயிர்(Human being)ஆணாக அல்லது பெண்ணாகப்(man or woman)பிறந்த பின்னர், குழந்தையிலிருந்து இளமைப் பருவம் அடைவர். இந்த குழந்தைப் பருவத்தில், உடல் உறுப்பில் மாற்றம் தெரிந்தால், உரிய மருத்துவரை அணுக வேண்டும்.
ஆண் பாலின உறுப்பில், முன்தோல் பின்னே செல்ல முடியாமல் சிறுநீர் வெளியேற்றத்தைத் தடுத்து சிரமங்களைக் கொடுக்கும்.இதே போன்று, ஆண், பெண் இருவருக்கும், மலம் வெளியேறும் வழியிலும் தடைகள் இருக்கலாம். இளைஞர்கள் ஆன பின்(After young people), ஆண், பெண் இரு பாலரும், உடல், மனதால் மாற்றத்தை அடைவர். இரு பாலினத்தவருக்கும் வெவ்வேறான ஹார்மோன்கள் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன.

நுண்கிருமிகளின் தாக்கம்-நோய்கள்:
மனித உடலில் 5 வழிகள் உள்ளதை ஐம்புலன்கள் என்று, மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிறோம்.நுண்கிருமிகள், ஐம்புலன்களையும் தாக்கி பல நோய்களை உருவாக்கும்.நோய்கள் உருவாகி குணமடைவதும் உண்டு. அதுவே தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் உடலில் இருந்து அழிப்பதும் உண்டு.ஆரம்பத்திலேயே இதனைக் கவனித்துச் சீர்படுத்த வேண்டும்.உடலில் ஏற்படும் வெப்ப மாற்றங்களை காய்ச்சல் என்கிறோம்.இது ஆரம்ப நிலையாக அமையும்.சில நேரங்களில் இதனைச் சரியாக கவனிக்காமல் விட்டால், தொடர்ந்து உடலைப் பாதிப்பதும் உண்டு.
நுண்கிருமிகளின் நீண்ட நாள் தாக்கத்தால் ஏற்படும் பல நோய்களில், காச நோயும்,தொழு நோயும் முக்கியமானதாகும்.தவறான ஒழுக்கமில்லாத பாலியல் உறவினால் ஏற்படும் நோய் எச்.ஐ.வி. நோய்த்தொற்றால் ஏற்படும் எய்ட்ஸ் ஆகும்.

ஆபத்து-விபத்தால் ஏற்படும் நோய்கள்:
அதிக மக்கள்தொகை, வாகன நெரிசல் போன்றவற்றால் விபத்தும், உயிரிழப்பும், உடல் சிதைவும் ஏற்படுகிறது.

தீமையான புற்றுநோய்:
உடல் உறுப்புகளில் சில நேரங்களில் தெரிந்தும்(Known), பல நேரங்களில் தெரியாமலும் சதை(Unknown Flesh)வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த சதை வளர்ச்சி உறுப்பை வீணாக்கிவிடும்.சாதாரண மண்தரையில் மேடு உருவாகி, அதில் புற்று உருவாகி பல நஞ்சு உயிர்கள் வாழ்வதற்கு இருப்பிடம் அமைவதைப் போல், புற்றுநோயும், இயற்கை நிலையில்,இருந்த ஒரு உறுப்பைத் தாக்கி, அந்த உறுப்பின் திசுக்களை வீங்க வைத்தும்,அழித்தும் சீரழிக்கின்ற காரணத்தால்தான் புற்றுநோய் எனப்படுகிறது. கண்ணுக்குத் தெரிகின்ற தோலில் இருந்து எலும்புகள் வரை எந்த உறுப்பையும் தாக்கும் வன்மை இந்த நோய்க்கு உண்டு.
புற்று நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை செய்யவில்லை என்றால், இது தாக்கியுள்ள உறுப்பையும், உடலையும் அழித்து உயிரையும் போக்கிவிடும்.

ஆலோசனைகள்:
  1. உடலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அதனை உடனே கவனித்துச் சீராக்க வேண்டும்.
  2. உடலில் ஏற்படும் காய்ச்சல், வீக்கம், வலி, அரிப்பு, வாந்தி, கண் வலி, காது வலி, உண்ண முடியாமை, வாந்தி எடுத்தல், அடிக்கடி மலம் கழித்தல், மலம் நிறம் மாறி வயிற்றுப் போக்கு ஏற்படுதல், மலத்தில் ரத்தம் போன்ற நிலைகளை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
  3. மயக்கம், தலைவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  4. மனநிலை மாற்றம் இல்லாமல்(Without mood shift), மன அமைதியை ஒருங்கிணைத்து, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
  5. ஒழுக்க நிலையிலிருந்து மாறுபடக்கூடாது.
  6. உணவு முறை சரியாக முறையாக இல்லையெனில் அதுவே பல நோய்களுக்கு காரணமாகிவிடும்.
  7. அதிகமான கொழுப்புச் சத்து, இதயத்தையும், ரத்தக் குழாயையும் பாதித்து, உயர் ரத்த அழுத்த நோயை உண்டாக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள், மாவுச்சத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.
  8. எந்தத் தொழில் செய்தாலும்,சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் நடைப் பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
  9. நல்ல நூல்களைப் படித்து,அவை காட்டும் வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதை அறிய வேண்டும்.

பொது மருத்துவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் சீரோடும், சிறப்போடும், ஆரோக்கியத்துடன் பெருவாழ்வு வாழலாம்.



No comments:

Post a Comment

Post Top Ad