AalosanaiNeram

AalosanaiNeram

Hot

Post Top Ad

Post Top Ad

Sunday, June 10, 2018

உடல்பருமனை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைக்க சிறந்த சிகிச்சை எது தெரியுமா??

June 10, 2018 0

உடல் பருமன் என்பது BMI (Body E-Mass Index) அளவை வைத்துக் கணக்கிடப்படுவது.Body Mass Index 40-க்கு மேல் உள்ளவர்களுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் மட்டுமே உடல் எடை குறையவாய்ப்புள்ளது.BMI 35-க்கு மேல் உள்ளவர்களுக்கும் அவர்கள், சர்க்கரை நோயாளியாகவோ ரத்த அழுத்த நோய் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.ஏனென்றால், இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களுடைய சர்க் கரை நோயும், ரத்த அழுத்தமும் குறைந்த அளவு மருந்துகளை உட்கொள்வதால் அல்லது மருந்துகளின் தேவை இல்லாமலே கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பு உண்டு.BMI 35-க்கு குறைவாக உள்ளவர்கள்(Less than BMI value is 35) அறுவைச் சிகிச்சை அல்லாத மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி,உணவு முறைக் கட்டுப்பாடு, மருந்துகள், எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடலாம்.


இந்த அறுவைச் சிகிச்சைக்கு வயது வரம்பு உண்டா?
இந்த அறுவைச் சிகிச்சை 25 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண்களுக்கு பொதுவாக செய்யப்படுகிறது.சில சமயங்களில் குழந்தைகள், இளம் வயதினருக்கும் செய்யப்படுகிறது.

உடல் பருமனைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை லாப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படுகிறதா?
உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சை தற்போது லாப்ராஸ்கோப்பி (நுண்துளை அறுவை சிகிச்சை)முறையில் செய்யப்படுகிறது.இந்த முறையில் செய்வதால் உடல் பருமன் உள்ள நோயாளிகள் 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும்.

எந்த வகையான அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது?
உடல் பருமன் அறுவைச் சிகிச்சை இரண்டு வகைப்படும்.முதலாவது  Restrictive Procedure (e.g.: 1. Sleeve gastrectomy, 2. Gastric Banding) இரைப்பையின் அள வைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை. இரண்டாவது Malabsorptive procedure (e.g. : Gastric Bypass).இந்த இரண்டு வகையான அறுவைச் சிகிச்சையில் பொதுவாக மேற்கொள் ளப்படுவது, Sleev-gastrectomy எனும் Restrictive procedure (அல்லது) Gastric Banding எனும் Restrictive procedure. அதாவது சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கும் வகையில் அறுவைச் சிகிச்சை அமையும்.உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் இருப்பவர்களுக்கு Gastric Bypass எனப்படும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

'ஸ்லீவ் கேஸ்ட்ர க்டமி' (Sleev-Gastre ctomy) அறுவைச் சிகிச்சையின் பலன் என்ன?
இந்த அறுவைச் சிகிச்சை முறை இன்று உலக அளவில் அதிகமாக செய்யப்படும் உடல் எடை குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும்.இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் இரைப்பையின் பெரும்பகுதி (3-ல் 2 பகுதி) லாப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்படுகிறது.
இதன் மூலம் இரைப்பையின் கொள்ளளவு 50 மில்லி மட்டுமே.இதனால் நோயாளி உணவு உட்கொள்ளும் அளவு குறைவதால் எடைக் குறைப்பு சாத்தியமாகிறது. இந்த அறுவைச் சிகிச்சையில் சிறு குடலில் எந்த மாற்றமும் செய்யாத தால் மிகப்பெரிய பின் விளைவுகள் இல்லை.

'கேஸ்ட்ரிக் பேண்டிங்' என்றால் என்ன?
அறுவைச் சிகிச்சையின் மூலம் சிலிக்கானால் செய்யப்பட்ட Gastric band இரைப்பையில் பொருத்தப்படுகிறது.இது இரைப்பையை இரு பாகங்களாகப் பிரிக்கிறது. இதனால் இரைப்பையின் மேல் பகுதி 30 மில்லி கொள்ளளவு உள்ளதாக மாற்றப்படுகிறது.இதனால் நோயாளி குறைந்த உணவே உட்கொள்ள முடியும்.
உணவு உட்கொள்ளும் அளவு குறைவதால் நோயாளியின் எடைக் குறைப்பு சாத்தியமாகிறது.இந்த அறுவைச் சிகிச்சை முறையின் குறைபாடு என்ன என்றால்,Gastric band இடம் பெயர்வதற்கோ செயலிழந்து போவதற்கோ வாய்ப்புள்ளது.

எனவே மீண்டும் அறுவைச் சிகிச்சையின் மூலமாக இந்த பேன்டை நீக்கி விட்டு மீண்டும் ஒரு பேன்டை பொருத்துவதோ அல்லது வேறு அறுவைச் சிகிச்சை செய்யவோ வேண்டியிருக்கும்.இந்த Gastric band முறையானது உலக அளவில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே செய்யப்படுகிறது.

'கேஸ்ட்ரிக் பை-பாஸ்' அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?
அதிக எடையுடன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை இது. இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் இரைப்பை இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது.முன் சிறுகுடல் இரைப்பையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டு உணவு செல்லும் பாதையும் பித்தமும் கணைய நீர் செல்லும் பாதையும் தனித் தனியாகப் பிரிக்கப்படுகிறது.இவை இரண்டும் பின்னர் ஒன்றாக இணைக்கப்படுகிறது.இதன் மூலம் அதிக அளவு எடை குறைப்பும் சர்க்கரை நோய் கட்டுப்படுவதற்கும் மிக அதிக வாய்ப்புள்ளது.ஆனால் சிறு குடலில் மாற்றங்கள் செய்வதால் இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் வாழ்நாள் முழுதும் வைட்டமின்கால்ஷியம்-புரதச் சத்துள்ளவற்றைச் சாப்பிடுவது அவசியம்.

இந்த எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப்(Weight reduction operation) பின்னர் மீண்டும் எடை அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டா?
வாய்ப்பு உள்ளது.எந்த வகையான எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்தாலும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது எடை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு.ஆனால், இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவ ரின் ஆலோசனையையும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையையும் பின்பற்றினால் மீண்டும் எடை கூடுவதற்கான வாய்ப்பு குறையும்.

இந்த அறுவைச் சிகிச்சையில் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
உடல் பருமன் உள்ளவர்களுக்கு மயக்கமருந்து(anesthesia) கொடுத்து எந்த ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது. குறிப்பாக, இந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகள், மூச்சுத் திணறல் வருவதற்கு வாய்ப்புண்டு.இந்தப் பிரச்னையை முதலிலேயே அறிந்து கொண்டால் அதற்குறிய சிகிச்சை மேற்கொள்ளலாம்.இந்த உடல் பரு மன் அறுவைச் சிகிச்சை இரைப்பை, சிறுகுடலில் செய்யப்படுவதால் அங்கே இரைப்பை நீரோ, சிறுகுடல் நீரோ கசிய வாய்ப்புள்ளது.இதையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருந்துகள் மூலமாகவோ அல்லது மறு அறுவைச் சிகிச்சை மூலமாகவோ சரி செய்துவிடலாம்.

இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா?
எந்த வகையான உடல் பருமன் குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவரை அணுகுவது கட்டாயம். ஏனென்றால் இந்த அறுவைச் சிகிச்சை எதிர்பார்த்ததை விட அதிகமான எடை குறைவோ அல்லது அறுவை சிகிச்சையின் பின் விளைவுகளோ ஏற்படும் வாய்ப்புள்ளது.குறிப்பாக சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் உள்ளவர்கள் குறைந்த அளவு மாத்திரை உட்கொள்ளும் அவசியம் வரலாம்.

இந்த அறுவைச்சிகிச்சையின் மூலம் ரத்தத்தில் கொழுப்புச்சத்து சேருவது(absorption of fat in the blood), மாரடைப்பு(heart attack)ஏற்படுவதைத் தடுக்க முடியுமா?
உடல் பருமன் உள்ளவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களாகவோ ரத்தக் கொதிப்பு உள்ளவர்களாகவோ உள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதால் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் கொழுப்புச்சத்தும் குறைய வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு மாரடைப்பு வருவ தற்கான வாய்ப்புகள் குறைவு.




Read More

குடலிறக்கத்திற்கு(ஹெர்னியாவுக்கு) ஒரே நாளில் தீர்வுகாண இதை படிங்க

June 10, 2018 0

ஹெர்னியா(Hernia), குடலிறக்கம், அண்டவாதம்(cosmology), இரணியா(irnia)இந்த அனைத்தும் குறிப்பிடுபவை ஒன்றையே.ஹெர்னியா குறித்த விவரங்களை இனி பார்ப்போம்:-

ஹெர்னியா என்றால் என்ன?
வயிற்றின் தசைகளில் சில வலுவற்ற புள்ளிகளில் வயிற்றுப் பாகங்கள் (குடல் உள்பட) வெளித்தள்ளப்படுவதே ஹெர்னியாவாகும்.பார்ப்பதற்கு வீக்கம் அல்லது கட்டி போல் வயிற்றுப் பகுதியில் இருப்பதால் நம்மில் பலர் ஒரு வித பயம் கலந்த தயக்கத்தால், பிறரிடமோ, மருத்துவரிடமோ உடனே அதைப் பகிர்ந்து கொள்வதில்லை.

ஹெர்னியாவுக்கு எத்தகைய சிகிச்சை முறை?
கோவை எல்.சி.ஹெர்னியா கிளினிக்கில் அனைத்து வித ஹெர்னியா சிகிச்சைகளும் லாப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகின்றன.திறந்த நிலை அறுவைச்சிகிச்சை('ஓபன் சர்ஜரி') மூலம் சரி செய்யப்பட்ட இடத்தின் தழும்பில் மீண்டும் வரும் ஹெர்னியாக்களும் எல்.சி. ஹெர்னியா மருத் துவமனையின் அதிநவீன தொழில்நுட்பத்தால்(sophisticated technology) லாப்ராஸ்கோப்பி(Laparoscopy) மூலமே சரி செய்யப்படுகின்றன.ஹெர்னியா வலை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளி, அடுத்த நாள் முதலே தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஹெர்னியாவுக்கு ஒரே நாளில் தீர்வு:
கோவையைச் சேர்ந்த தம்பு, ஒரு தொழில்கூடத்தின் உரிமையாளர். அவர் கடந்த 1995-ஆம் ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் வாகனத்தின் கைப்பிடி வயிற்றில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்(vehicle collapsed in the stomach).காயத்தின் வழியாக வயிற்றின் உள் உறுப்புகள் வெளியே தெரியும் விதமாக மிக மோசமான விபத்தாக அது இருந்தது.
அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒரு பெரிய அவசர அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு(After few month later) அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் வயிற்றில் ஒரு பெரிய வீக்கம் தென்படத் தொடங்கியது.அதன் அளவு நாளடைவில் மிகப் பெரியதாக மாறியது.அது தழும்புகளில் ஏற்படும் குடலிறக்கம் என்று கண்டறியப்பட்டது.ஏறக்குறைய 19 ஆண்டுகள் தம்பு அந்த பெரிய குடலிறக் கத்துடன் மிகவும் அசௌகரியத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்(beginning of 2014) குடலிறக்கத்தின்(in Hernia)ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மீண்டும் அவதிப்பட்ட தம்பு, அருகில் உள்ள மருத்துவமனையில் தாற்காலிக சிகிச்சை மேற்கொண்ட பிறகு, கோவை எல்.சி. மருத்துவமனைக்கு வந்தார்.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு அதிநவீன லாப் ராஸ்கோப்பி குடலிறக்க அறுவைச் சிகிச்சை(Sophisticated lap rascosy hernioplasty)மூலம் சிதைந்த பகுதியில் வலை பொருத்தப்பட்டது. இதையடுத்து 2 நாள்களில் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். தற்போது குடலிறக்கத்தின் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கையை புது நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தயாராகி விட்டார்.



ஆரம்ப நிலையிலேயே...ஹெர்னியா பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்ள தாமதம் செய்யும் நிலையில், குடல் அடைப்பு, குடல் அழுகுதல் போன்ற விபரீத விளைவுகளுடன் பண விரயம், மன உளைச்சலும் ஏற்படும். எனவே ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

Read More

Friday, June 8, 2018

உணவுக்குழாய்,இரைப்பை மற்றும் குடலை காக்க இதை படிங்க

June 08, 2018 0

சென்னையில் இருக்கும் ராஜிவ் காந்தி பொது அரசு மருத்துவமனை கிழக்கு இந்தியக் கம்பெனியின் நோய்வாய்ப்பட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 1664ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது.
ஆங்கில பிரெஞ்சு போருக்குப் பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து 1772-ஆம் ஆண்டு புதிய இடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது.அலோபதி மருத்துவ சிகிச்சை முறை மூலம் சிகிச்சை அளிப்பதிலும்,நோய்களைக் கண்டறிவதிலும், மருந்துப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகளிலும் ஐரோப்பியர்களுக்கும், யுரேசியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர்.
ராணுவ ஜெனரல்கள் (மருத்துவர்கள்)இந்த மருத்துவமனையை நிர்வகித்ததால் இதற்கு 'ஜெனரல் மருத்துவமனை' என்று பெயர் வந்தது. 1827ஆம் ஆண்டு டாக்டர் மோர்டிமர் மருத்துவமனையின் முதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் மோர்டிமர் நடத்தி வந்த மருத்துவப் பள்ளி பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டடது.1842-ஆம் ஆண்டு இந்த மருத்துவமனையில் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக் கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டு, ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1850ஆம் ஆண்டு இதற்கு 'மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி' என்று பெயரிடப்பட்டது.

26 துறைகளுக்கு தனி அந்தஸ்து:
மருத்துவமனை தொடங்கப்பட்டு 350 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 56 துறைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில் 26 துறைகளுக்கு தனி நிறுவன(Institute) அந்தஸ்து கிடைத்துள்ளது.
நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, மூட்டு நோய் சிகிச்சைருமட்டாலஜி) துறை, இரைப்பைகுடல் அறுவைச் சிகிச்சைத் துறை, முதியோர் சிகிச்சை, முதியோர் அறுவைச் சிகிச்சைத் துறை உள்ளிட்டவை இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் மாற்றம் அடைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 18,500 புறநோ யாளிகள் வருகின்றனர்.8,500 படுக்கைகள் உள்ளன.அதே போன்று சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கி 179 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வாய்ந்த இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை:
மறைந்த முன்னாள் பேராசிரியர் ரங்கபாஷ்யம் 1978-ஆம் ஆண்டு இரைப்பைகுடல் அறுவைச் சிகிச்சைத் துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தொடங்கினார்.2010-ஆம் ஆண்டு இந்தத் துறை சிறப்பு மையமாக அங்கீகரிக்கப்பட்டது.2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் துறை தனி நிறுவன அந்தஸ்தைப் பெற்றது.
இந்தத் துறையில் ஓராண்டுக்கு 8 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.முக்கியமாக உணவுக் குழாய், இரைப்பை-குடல் சார்ந்த பிரச்னைகள், உணவுக் குழாய் - இரைப்பை-குடல் புற்று நோய்களுக்கு இந்தத் துறை சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது.

இது குறித்து துறையின் தலைவர் டாக்டர் எஸ். எம். சந்திரமோகன் கூறியது:
எங்கள் துறையில் நோயாளிகள் மீதான தனிப்பட்ட அக்கறை, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பிற மாநிலங்கள், நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்தத் துறையைப் பொருத்தவரை 7 நாள்களும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும்.நோயாளிகள் எந்த நேரத்தில் வந்தாலும் துறையில் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த ஆண்டில் மட்டும் 952 சிக்கலான அறுவைச் சிகிச்சைகளும் 132 அவசர அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரத்யேக செல்பேசி வசதி:
எங்கள் துறையைச் சேர்ந்த மருத்துவர்களை 94449 01234 என்ற செல் பேசி எண்ணில் நோயாளிகள் தொடர்பு கொள்ளலாம்.இது எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத ஒரு திட்டமாகும்.எங்களிடம் சிகிச்சை பெற்ற பெறும் நோயாளிகள் தங்கள் உடல் நிலை குறித்து தங்கள் வீட்டிலிருந்தே மருத்துவரிடம் ஆசனை கேட்கலாம். மின்னஞ்சல் மூலமும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இது தவிர தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட நோயாளிகள், பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நோயாளிகள் தன்னார்வ உதவிக் குழு ஒன்று செயல்படுகிறது.இதில் சுமார் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த குழுவினர்கள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் ஆலோசனைகளை வழங்குவார்கள்.ஆராச்சியை பொறுத்தவரை இதுவரை 14 சிகிச்சை நுட்பங்கள்(Techniques)இந்த துறையால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துறையின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இரைப்பைகுடல் அறுவைச்சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன.ஆராய்ச்சிக் கட்டுரைகள், போஸ்டர் வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தேசிய அளவில் 73 விருதுகளும், சர்வேதச அளவில் 13 விருதுகளும் கிடைத்துள்ளன.
இந்தத் துறைக்கான மைல் கல்லாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் நடைபெறத் தொடங்கிவிட்டால், இந்தத் துறை முழுமை பெற்றுவிடும் என்றார் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன்.



Read More

ஆரோக்கியத்துடன் பெருவாழ்வுவாழ இதைமுதல்ல படிங்க

June 08, 2018 0

மனித இனத்தைக் காப்பாற்றும் மருத்துவ முறைகளில்,ஆங்கில வழியில் கற்றுத் தரப்படும் அலோபதி மருத்துவம் முக் கிய இடம் வகிக்கிறது.அலோ பதி மருத்துவம், உலகம் தழுவிய முறையில் கடைப்பிடிக்கப்படும் ஒன்றாகும். இது உலகளவில் ஆங்கில மொழியில் கற்றுத் தரப்படும் மருத்துவமுறை யாகும்.
பொது மருத்துவம்('ஜென ரல் மெடிசின்') என்றால் பொது மக்களின் மருத்துவம் என்று கூறப்படும்.பொதுவாக மனித உடலின் பிரிவைச் சொல் லும்போது, 2 பிரிவுகளாகப் பிரித்து, வெளியே தெரியும் உடல் புற உடல், உள்ளே உள்ளது அக உடல் என்கிறோம்.
புற உடலின் மனிதபாக உறுப்புகளை குறித்துப் படிப்பதை(study of the human body organs), 'அனாடமி' (anatomy)என்கிறோம்.அதே உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் குறித்து படிப்பதை ஃபிசியாலஜி' என்கிறோம்.
அலோபதி மருத்துவத்தில், பல தரப்பட்ட பிரிவுகள் உண்டு. இந்தப் பிரிவுகளின் அடிப்படை மருத்துவமாக, அதனையடுத்து சிறப்புத் துறை மருத்துவமாகவும் இதையும் கடந்து, உயர் சிறப்புத் துறை மருத்துவமாகவும் பிரிவுகள் உள்ளன.எனவே பொது மருத்துவம் என்பது தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் உள்ளடக்கிய பொது மக்களுக்கான அடிப்படை மருத்துவமாகும்.

உடலில் உள்ள நோய்கள்:
1.பிறவியிலேயே உண்டாகும் நோய்கள்; 2. கொடிய நுண்கிருமிகளால் உண் டாகும் நோய்கள்; 3. விபத்து, ஆபத்தால் உண்டாகும் நோய்கள்; 4.எல்லை மீறி வளர்ந்து உறுப்புகளை அழிக்கும் புற்றுநோய்கள்; 5. மேலே குறிப்பிட்ட வகைகளில் சேராமல், சில வகை நோய்களும் உண்டு.
மனித உயிரோடு இணைந்த உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக உடலும், உயிரும் எப்படி உண்டாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.இறைவன் இந்த உலகத்தைப் படைத்தபோது, ஆதாம் என்ற ஆணையும், ஏவாள் என்ற பெண்ணையும் படைத்து இணைய வைத்தார்.
மருத்துவக் கூற்றின்படி(medical report)ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு கரு அணு(Nucleus) அவர்களது உடலில் உருவாகிறது. இவர்கள் வாலிப வயதைஅடைந்த பின், பொதுவாக இந்தக் கரு அணுக்கள் உருவாகின்றன.ஆண்களின் பாலியல் உறுப்புகளில், விந்தகங்களில் பலகோடி அணுக்கள் உருவாகின்றன. அதே நேரத்தில், பெண்கள் பாலியல் உறுப்பான கருச்செடியில் ஒவ்வொரு மாதமும் ஒரு கரு அணு உண்டாகிறது.
ஆணின் பாலியல் அணுவிற்கு விந்தணு என்று பெயர். பெண்ணின் பாலியல் அணுவிற்கு நாதம் என்று பெயர். இவை இணைந்து உருவாவதே மனித உயிராகும்.இந்த உயிர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.

குழந்தை பாலினத்துக்கு ஆணே காரணம்:
ஒரு ஆணின் கருவணுவில், எக்ஸ்-ஒய் என்ற இரு அணுக்களும், பெண் கருவணுவில் எக்ஸ்-எக்ஸ் என்ற இரு அணுக்களும் உள்ளது.ஆண் கருவில் உள்ள ஒய் அணு, பெண்ணின் கருவணுவில் உள்ள எக்ஸ் அணுவுடன் இணைந்தால், ஆண் குழந்தை பிறக்கும்.இதில் தெரிந்துகொள்வது என்னவென்றால், ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்பதற்கு ஆணின் கரு அணுக்களே காரணம்.ஆனால், பெண் குழந்தை பிறந்தால், எந்தப் பாவமும் அறியாத பெண்ணைக் குறை கூறுவது தவறாகும்.
மனித உடலில்(human body)நாம் கீழ்க்கண்ட சில மாற்றங்களைப் புரிந்துகொள்ள(understand)வேண்டும்.தாயின் வயிற்றில் பிறக்கும்போதே, குறைபாடோடு பிறக்கின்ற குழந்தைதான் பிறவிக் குறைபாடுள்ள குழந்தையாகக் கணிக்கப்படுகிறது
1.கண்ணுக்குத் தெரிகின்ற புற உடலில், சில உறுப்புகள் இல்லாமலோ, இருந்தும் குறைபாடுகளோடு பிறக்கலாம்.இப்படிப்பட்ட குறைபாடுகள் பல இருந்தாலும், சிலவற்றைப் புரிந்கொள்ள வேண்டும்.ஆண், பெண் இருபால ருக்கும் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன.சில நேரங்களில் ஒரு சிறுநீரகம் இல்லாமலும் பிறக்க வாய்ப்புள்ளது.
2. சில நேரங்களில், சிறுநீரகம்(Kidney)இடம் மாறி தங்கியிருக்கலாம்.சில நேரங்களில், சிறுநீரக உறுப்புகள் இணையும் இடங்களில் அடைப்பு அல்லது தடை ஏற்பட்டு பிறக்கலாம்.
இப்படி பல தரப்பட்ட பிறவிக் குறைபாடுகளை, மருத்துவ ஆய்வுக்கருவிகள் மூலம் கண்டறிவதால், குழந்தைகள் பிறக்கும் முன்பும், பின்பும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து குறைபாட்டை நீக்க முடியும்.

வளரும் உடலும், தெரிய வேண்டிய செய்திகளும்:-
மனித உயிர்(Human being)ஆணாக அல்லது பெண்ணாகப்(man or woman)பிறந்த பின்னர், குழந்தையிலிருந்து இளமைப் பருவம் அடைவர். இந்த குழந்தைப் பருவத்தில், உடல் உறுப்பில் மாற்றம் தெரிந்தால், உரிய மருத்துவரை அணுக வேண்டும்.
ஆண் பாலின உறுப்பில், முன்தோல் பின்னே செல்ல முடியாமல் சிறுநீர் வெளியேற்றத்தைத் தடுத்து சிரமங்களைக் கொடுக்கும்.இதே போன்று, ஆண், பெண் இருவருக்கும், மலம் வெளியேறும் வழியிலும் தடைகள் இருக்கலாம். இளைஞர்கள் ஆன பின்(After young people), ஆண், பெண் இரு பாலரும், உடல், மனதால் மாற்றத்தை அடைவர். இரு பாலினத்தவருக்கும் வெவ்வேறான ஹார்மோன்கள் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன.

நுண்கிருமிகளின் தாக்கம்-நோய்கள்:
மனித உடலில் 5 வழிகள் உள்ளதை ஐம்புலன்கள் என்று, மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிறோம்.நுண்கிருமிகள், ஐம்புலன்களையும் தாக்கி பல நோய்களை உருவாக்கும்.நோய்கள் உருவாகி குணமடைவதும் உண்டு. அதுவே தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் உடலில் இருந்து அழிப்பதும் உண்டு.ஆரம்பத்திலேயே இதனைக் கவனித்துச் சீர்படுத்த வேண்டும்.உடலில் ஏற்படும் வெப்ப மாற்றங்களை காய்ச்சல் என்கிறோம்.இது ஆரம்ப நிலையாக அமையும்.சில நேரங்களில் இதனைச் சரியாக கவனிக்காமல் விட்டால், தொடர்ந்து உடலைப் பாதிப்பதும் உண்டு.
நுண்கிருமிகளின் நீண்ட நாள் தாக்கத்தால் ஏற்படும் பல நோய்களில், காச நோயும்,தொழு நோயும் முக்கியமானதாகும்.தவறான ஒழுக்கமில்லாத பாலியல் உறவினால் ஏற்படும் நோய் எச்.ஐ.வி. நோய்த்தொற்றால் ஏற்படும் எய்ட்ஸ் ஆகும்.

ஆபத்து-விபத்தால் ஏற்படும் நோய்கள்:
அதிக மக்கள்தொகை, வாகன நெரிசல் போன்றவற்றால் விபத்தும், உயிரிழப்பும், உடல் சிதைவும் ஏற்படுகிறது.

தீமையான புற்றுநோய்:
உடல் உறுப்புகளில் சில நேரங்களில் தெரிந்தும்(Known), பல நேரங்களில் தெரியாமலும் சதை(Unknown Flesh)வளர்ச்சி ஏற்படுகிறது. அந்த சதை வளர்ச்சி உறுப்பை வீணாக்கிவிடும்.சாதாரண மண்தரையில் மேடு உருவாகி, அதில் புற்று உருவாகி பல நஞ்சு உயிர்கள் வாழ்வதற்கு இருப்பிடம் அமைவதைப் போல், புற்றுநோயும், இயற்கை நிலையில்,இருந்த ஒரு உறுப்பைத் தாக்கி, அந்த உறுப்பின் திசுக்களை வீங்க வைத்தும்,அழித்தும் சீரழிக்கின்ற காரணத்தால்தான் புற்றுநோய் எனப்படுகிறது. கண்ணுக்குத் தெரிகின்ற தோலில் இருந்து எலும்புகள் வரை எந்த உறுப்பையும் தாக்கும் வன்மை இந்த நோய்க்கு உண்டு.
புற்று நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை செய்யவில்லை என்றால், இது தாக்கியுள்ள உறுப்பையும், உடலையும் அழித்து உயிரையும் போக்கிவிடும்.

ஆலோசனைகள்:
  1. உடலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அதனை உடனே கவனித்துச் சீராக்க வேண்டும்.
  2. உடலில் ஏற்படும் காய்ச்சல், வீக்கம், வலி, அரிப்பு, வாந்தி, கண் வலி, காது வலி, உண்ண முடியாமை, வாந்தி எடுத்தல், அடிக்கடி மலம் கழித்தல், மலம் நிறம் மாறி வயிற்றுப் போக்கு ஏற்படுதல், மலத்தில் ரத்தம் போன்ற நிலைகளை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
  3. மயக்கம், தலைவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  4. மனநிலை மாற்றம் இல்லாமல்(Without mood shift), மன அமைதியை ஒருங்கிணைத்து, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
  5. ஒழுக்க நிலையிலிருந்து மாறுபடக்கூடாது.
  6. உணவு முறை சரியாக முறையாக இல்லையெனில் அதுவே பல நோய்களுக்கு காரணமாகிவிடும்.
  7. அதிகமான கொழுப்புச் சத்து, இதயத்தையும், ரத்தக் குழாயையும் பாதித்து, உயர் ரத்த அழுத்த நோயை உண்டாக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள், மாவுச்சத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.
  8. எந்தத் தொழில் செய்தாலும்,சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் நடைப் பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
  9. நல்ல நூல்களைப் படித்து,அவை காட்டும் வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதை அறிய வேண்டும்.

பொது மருத்துவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் சீரோடும், சிறப்போடும், ஆரோக்கியத்துடன் பெருவாழ்வு வாழலாம்.



Read More

Post Top Ad