விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டதா முதல்ல இதைப்படிங்க - AalosanaiNeram

Hot

Post Top Ad

Wednesday, June 6, 2018

விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டதா முதல்ல இதைப்படிங்க

எதிர்பாராமல் ஒருவருக்கு ஏற்படக்கூடிய விபத்து அவரின் குடும்பத்தை பலமாகப் பாதிக்கும் பொருளாதாரம் மட்டுமின்றி, சமுக நிர்பந்தங்களை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் வாகனங்களால் விபத்துகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதோடு பெரும்பாலானவை பெரும்விபத்துகளாகவே (High Velocity) ஏற்பட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விபத்து ஏற்படும்போது, விபத்தினால் பாதிக் கப்பட்டவருக்கு தசை அல்லது சவ்வு கிழிதல், எலும்பு முறிவு ஏற்பட்டு, வேலை செய்யும் தன்மையைப் பாதிக்கின்றன.

சவ்வு கிழிதல்-தவறான கருத்து:
பெரும்பாலானோர் நினைப்பது போல் இன்றி, சவ்வு பாதிப்புகள் போதுமான ஓய்வு கொடுத்தால் அன்றி சீராகாது. நீண்ட காலத்துக்கு வலியை ஏற்படுத்தும். எலும்பு முறிவுகள் பலவகைப்படும். 2, 3 துண்டுகளாக நொறுங்குதல், பல் பகுதிகளாக உடைதல், மூட்டினுள் எலும்பு முறிவு பர் வியிருத்தல், வெளிப்புண்ணுடன் எலும்பு முறிவு ஏற்படுதல் போன்ற பல விஷயங்கள் எலும்பு சேர்ந்து சீராகி வருவதைத் தீர்மானிக்கும்.உடைந்த பகுதியைச் சுற்றியுள்ள தசை, தோல்களின் ரத்த ஓட்டமும், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடியும் முக்கியக் காரணிகளாகும். உடைந்த எலும்பைச் சீராக்க மாவுக் கட்டு போடுதல், உள்கம்பி திருகாணிகள் பொருத்துதல் (Interlocking IM nailing), தகடு திருகாணிகள் பொருத்துதல் (Plate Screw), ஓ-கம்பி பொருத்துதல், திருகாணிகள் பொருத்துதல், உடைந்த பகுதிக்கு மாற்றுப் பகுதி பொருத்துதல் எனப் பல வகையான சிகிச்சைகள் உள்ளன.
நோயாளியின் வயது, மற்ற நோய்கள் (சக்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு), எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் அல்லது தோல் பாதிப்பு மேலும் இதர காரணிகளைக் கருத்தில் கொண்டே நோயாளியின் சிகிச்சை முறையை மருத்துவர் தேர்ந்தெடுப்பார்.
வெளிப்புண்ணுடனோ, எலும்பு பல பகுதிகளாக நொறுங்கியோ மற்றும் பல பிரச்னைகள் இருப்பின் சிகிச்சை பல கட்டங்களாகப் பிரித்து பலமுறை அறு வைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல, மூட்டின் உள்பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டு இருந்தால், அதைச்சீர் செய்ய அறுவைச் சிகிச்சை மிகவும் அவசியமாகும்.முறிந்த எலும்பு 3 வாரங்களில் சேர ஆரம்பித்தாலும் பலப்பட்டு முழுவதுமாக சீராவதற்கு 3 மாதங்கள் வரை ஆகும். அந்நேரத்தில் முழு உடல் கனத்தையும் உடைந்த எலும்பிற்கு கொடுத்தால் மீண்டும் முறிவ தற்கும் வாய்ப்பு உண்டு.
சில சமயம் உடைந்த எலும்பு சரியாக சேரவில்லையெனில், எலும்பு மஜ்ஜை அல்லது செயற்கை எலும்பு பொருத்த வேண்டியது இருக்கலாம்.

நவீன சிகிச்சை முறை:
முறிந்த எலும்பைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட மென்திசுக்கள் மேலும் அதிக அளவில் பாதிப்பாகாமல் தடுப்பதற்கு, சிறுதுளைகள் மூலம் (Minimally Invasive) அறுவைச் சிகிச்சை செய்தல் முறை இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரத்த இழப்பு, மென்திசு பாதிப்புகள் குறைந்து, எலும்பு முறிவு விரைவாக குணமாகிறது.

எலும்பில் கிருமித் தாக்கம் கூடாது:
முழங்கால் மூட்டு சவ்வுகளின் ஏற்படும் பாதிப்புகளுக்கு இன்று பெரும்பாலும் நவீன நுண்துளை (Arthroscopy) அறுவைச் சிகிச்சையே செய்யப்படுகிறது.மற்ற அறுவைச் சிகிச்சை போல் எலும்பில் கிருமித் தொற்று ஏற்பட்டால், அதன் விளைவாக  நிரந்தரமாக சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, நீண்ட கால பாதிப்பாக வாய்ப்புண்டு என்பதாலேயே, மிக கவனமாகக் கையாளுதல் அவசியம்.
அறுவைச் சிகிச்சையின்போது, லேமினார் புளோவுடன்(Lamani Flo) கூடிய அதிநவீன அறுவைச் சிகிச்சை (sophisticated surgical venues) அரங்கங்கள் பயன்படுத்தினாலும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அதிக கவனமாக கண்காணித்தல் அவசியம். முதுகெலும்பிடை சவ்வு விலகல் (Disc prolapse), எலும்பு ஒன்றின் மேல் ஒன்று விலகல் (Spondylolisthesis), தேய்மானம் (Spondylosis) போன்றவற்றால் கழுத்து வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம்.சவ்வு விலக்கம் மற்றும் எலும்பு விலக்க வலி ஓய்வி னால் சீராகவில்லையெனில், அறுவைச் சிகிச்சை மிக அவசியமாகும்.நுண்துளை அறுவைச் சிகிச்சை (Endos cope spine surgery) மூலம் சவ்வுவிலக்கத்திற்கு இப் போது அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
மூட்டுத் தேய்மானம் ஏற்பட்டு, மருந்துகள் மற்றும் பிசியோதெரபி மூலம் வலி குறையவில்லையெனில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நீடித்த நிரந்தர நிவாரணம் தரும்.


No comments:

Post a Comment

Post Top Ad